புதுதில்லி, மார்ச் 31- ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான ஒன்றிய மோடி அரசின் அடக்குமுறையை கண்டித்து தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிறன்று “இந்தியா” கூட்டணி சார்பில் பிரம்மாண்ட போராட்ட பொதுக்கூட்டம் .
ஆம் ஆத்மி மூத்த தலைவரும், தில்லி அமைச்சருமான கோபால் ராய் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் து.ராஜா, திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி, சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டு கட்சியின் தலை வர் பரூக் அப்துல்லா, பிடிபி தலை வர் மெகபூபா முப்தி, ஜேஎம்எம் சார்பில் ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டெரிக் ஓ பிரையன், விடு தலை சிறுத்தைக் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 27 கட்சிகளின் தலைவர்கள், சிறை யில் வாடும் அரவிந்த் கெஜ்ரி வாலின் மனைவி சுனிதா மற்றும் பல்லாயிரகணக்கானோர் இந்த பிரம்மாண்ட போராட்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
(தலைவர்கள் முழக்கம்
பக்கம் 4)