22 மீனவர்கள் கைது: இலங்கை அட்டூழியம்!
மதுரை, ஆக.6- தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இரண்டு இயந்திரப் படகுகளில் சென்ற 22 மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
‘தருவைகுளம் மீன் இறங்கு துறைமுகத்திலிருந்து செல்லும் இயந்திரப் படகுகள், மேற்கே (கேரளா வழியாக) அரபிக்கடலுக்குச் சென்று இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் பல நாள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்தச் சூழலில் 22 மீனவர்கள் எல்லை தாண்டிய தாகக் கூறி, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. இதனிடையே, 22 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தருவைகுளம் மீனவர்கள் தூத்துக்குடி ஆட்சியரிடம் செவ்வாயன்று கோரிக்கை மனு அளித்தனர்.
கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு
இராமநாதபுரம், ஆக. 6 - இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மலைக்கண்ணன் இவரது மகன் எம். மருதமலை. இவர் பக்ரைன் நாட்டிற்கு மீன்பிடி ஒப்பந்த கூலியாகச் சென்றுள் ளார். திங்களன்று இரவு 9.30 மணியளவில் எம். மருதமலை உள்ளிட்ட மூன்று பேர் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்களை சவூதி கடற்படையினர் விரட்டியுள்ளனர். இதில் அவர்களது பைபர் படகு மூழகியதில் மருதமலை கடலில் மூழ்கி உயி ரிழந்தார். இரண்டு மீனவர்கள் உயிர்தப்பினர். உயிரிழந்த மீனவர் எம்.மருதமலைக்கு விஜயசாந்தி (32) என்ற மனைவி யும் பத்தாம் வகுப்பு படிக்கும் மகிமா (15), எட்டாம் வகுப்பு படிக்கும் மது (13) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.