india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாட்னா

ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15ஆவது பாலம்
பீகார் பாஜக கூட்டணி அரசுக்கு நெருக்கடி

பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தில் திரையரங்கு களில் புதிய படங்கள் ரிலீஸ் ஆவது போல பாலங்கள் இடிந்து விழும் அசம்பாவித சம்பவம், தொடர்ச்சி யாக நடைபெற்று வருகிறது. கடந்த 29 நாட்களில் 14 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்நிலையில், அராரியா மாவட்டத்தில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.

2 ஆண்டுகளில்  இடிந்து விழுந்த பாலம்

அராரியா மாவட்டத்தின் அம்ஹாரா கிராமத்தில் ஓடும் பர்மன் ஆற்றின் மீது 2009இல் பாலம் ஒன்று  கட்டப்பட்டது. 2017இல் ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்து மக்கள் பயன் படுத்தத் தகுதியற்றது என அறிவிக் கப்பட்டது. எனினும் 2021இல் சீரமைக் கப்பட்டு 2022இல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், சீரமைக்கப்பட்டு வெறும் 2 ஆண்டுகளிலேயே இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. இது ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15ஆவது பாலமாகும்.

பாலங்கள் இடிந்து விழும் சம்ப வங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக கூட்டணி அரசின் ஊழல் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கின்றன என எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பாலங்கள் சரிந்து விபத்துக்குள்ளானது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வர வுள்ளன. இது பீகார் பாஜக கூட்டணி அரசுக்கு எதிரான நெருக்கடியாக மாறி யுள்ளது.

புதுதில்லி

4 மருத்துவ  மாணவர்கள் கைது

2024ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறி யதையடுத்து தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. 

இந்நிலையில், பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் பாட்னா எய்ம்ஸ் மருத்துமனையைச் சேர்ந்த 4 இள நிலை மருத்துவ மாணவர்களுக்கும் நீட் முறைகேடு விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தகவல் வெளியாகியது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் 4 மாணவர்களையும் கைது செய்து தடுப்பு காவலில் விசாரித்து வரு கின்றனர். கைது செய்யப்பட்ட 4 மாண வர்களும் 2021 பேட்ச் பிரிவைச் சேர்ந்த வர்கள். 4 மாணவர்களில் மூன்று பேர் பீகார் மாநிலத்தையும், ஒருவர் ஜார்க்கண்ட் மாநிலத்தையும் சேர்ந்தவர் ஆவர்.