நாடாளுமன்ற வளாகத்தில் 2 பேரும், நாடாளுமன்ற மக்கள வைக்குள் 2 பேரும் வண்ணப் புகைக்குப்பிகளை வீசி அத்துமீறலில் ஈடு பட்ட சம்பவம் குறித்து, அவையில் பதில ளிக்க முடியாது பிடிவாதமாக இருக்கும் மோடி அரசு, மறுபுறத்தில், மக்களவை யில் 100 பேர், மாநிலங்களவையில் 46 பேர் என மொத்தம் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 146 எம்.பி.க்களை கூட்டத்தொடர் முழு வதும் சஸ்பெண்ட் செய்து அராஜகத்தை அரங்கேற்றியுள்ளது.
மேலும், எதிர்க்கட்சிகள் அவைக்குள் வரமுடியாத இந்த சூழலைப் பயன் படுத்தி, 3 குற்றவியல் சட்டத்திருத்த மசோதா, தகவல் தொடர்பு மசோதா, தேர்தல் ஆணையர் நியமன மசோதா போன்ற முக்கிய மசோதாக்களையும் விவாதமே இன்றி வேகவேமாக நிறை வேற்றி வருகிறது.
இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கை களைக் கண்டித்து, ‘இந்தியா’ கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வியாழ னன்று, நாடாளுமன்ற மாளிகையில் இருந்து விஜய் சவுக் வரை பேரணி நடத்தினர். இதில், எதிர்க்கட்சித் தலை வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்ட னர்.
அப்போது பேசிய காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜூன கார்கே, “இன்று நாங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம். சபை இயங்குவதை அர சாங்கமும் மோடிஜியும் விரும்ப வில்லை. மாநிலங்களவைத் தலைவர் தொடர்பான (மிமிக்ரி) பிரச்சனைக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால், ஜனநாயகத்தில் நாட்டு மக்களின் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பேசுவதும், பிரதிபலிப்பதும் நமது உரிமை; என்றுமே அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். மக்களவையில் பாது காப்பு மீறல் எவ்வாறு நடந்தது, யார் பொறுப்பு, அது ஏன் நடந்தது? என்பதை விளக்குமாறு கோருகிறோம். ஆனால், பிரதமர் மோடியும், அமித்ஷா-வும் அவைக்கு வராதது, வருத்தமளிக்கி றது. ஆனால், நாடாளுமன்றப் பாது காப்பு குறித்து, நாடாளுமன்றத்தில் பேசாத அவர்கள், வாரணாசியிலும், அக மதாபாத்திலும், தொலைக்காட்சியிலும் பேசுகின்றனர். இது நாடாளுமன்றத்திற்கு அவர்கள் செய்த அவமரியாதை ஆகும்” என்றார்.
146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெள்ளியன்றும் (டிசம்பர் 22), ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த உள்ளனர்.