india

img

12 வயது சிறுமி 4 பேரால் கும்பல் பலாத்காரம்

ஒன்றிய உள்துறை அமைச்சக காவல்துறையின் நேரடி கட்டுப்  பாட்டில் இருக்கும் தில்லி  பகுதி பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தைப் போலவே பெண்க ளுக்கு பாதுகாப் பில்லா பகுதியாக மாறிவரும் நிலை யில், தில்லி சதர்  பஜாரில் 12 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று தில்லி சதர் பஜாரில் சுரேஷ்குமார் (38) என்பவர் டீக்கடையில் கழிவுகளை அகற்றும் பணிக்காக வந்த 12 வயது சிறுமியை, டீக்  கடையில் வேலை செய்யும் 3 சிறுவர்கள்  உட்பட 4 பேர் கொண்ட கும்பல் பலாத்  காரம் செய்துள்ளனர்.

பாலியல் வன்  கொடுமை செய்த கும்பல் இந்த சம்ப வம் பற்றி வெளியே சொன்னால்  கொலை செய்து விடுவோம் என்று மிரட்  டியதால் அச்சிறுமி தனது வீட்டில்  சொல்லாமல் இருந்த நிலையில், மன உளைச்சல் காரணமாக சம்பவம் நடந்து  4 நாட்களுக்குப் பிறகு சிறுமி தனது  பெற்றோரிடம் கூற, பெற்றோர் உட னடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டீக்கடை உரிமையாளர் சுரேஷ் மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 4  பேரையும், சிறுமியை பாலியல் வன் முறை திட்டத்திற்காக அழைத்து வந்த  பெண்ணின் உறவினர் ஒருவர் என 5  பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.