புதுதில்லி, ஜன.17-
ஜனவரி 22 அன்று நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் உருவாகும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் உள்ள 30 நகரங்களின் வர்த்தக சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படை யில், இந்த மதிப்பீட்டை வெளி யிடுவதாக அகில இந்திய வர்த்த கர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் பிர வீன் கண்டேல்வால், “இந்த நிகழ்வு மத உணர்வுகளுடன் எதிரொலிப் பது மட்டுமல்லாமல், பொருளாதார நடவடிக்கைகளிலும் எழுச்சியைக் கொண்டுவருகிறது. மக்களின் நம்பிக்கையும் நாட்டின் பாரம்பரிய பொருளாதார அமைப்பின் அடிப்ப டையில் பல புதிய வணிகங்களை உருவாக்க வழிவகுக்கின்றன” என் றார். மேலும், “ராமர் கோவில் கும்பா பிஷேகத்தை முன்னிட்டு நாடு முழு வதும் வர்த்தக சங்கங்கள் மூலம் சுமார் 30 ஆயிரம் வெவ்வேறு நிக ழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, “ஸ்ரீராமர் கொடி கள், பேனர்கள், தொப்பிகள், டி- சர்ட்டுகள் மற்றும் ராமர் கோவி லின் உருவம் அடங்கிய அச்சி டப்பட்ட ‘குர்தாக்கள்’ ஆகியவற் றுக்கு சந்தைகளில் அதிக தேவை உள்ளது. ராம் மந்திர் மாடல்களுக் கான தேவையும் வேகமாக அதி கரித்து வருகிறது. நாடு முழுவதும் 5 கோடி மாடல்கள் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களின் பல நகரங்களில் சிறிய உற்பத்தி நிலையங்கள் இரவும் பகலும் வேலை செய்கின்றன.
அடுத்த வாரத்தில், தில்லியில் உள்ள 200க்கும் மேற்பட்ட பெரிய சந்தை கள், ஏராளமான சிறிய சந்தைகள் ஸ்ரீராமர் கொடிகள் மற்றும் அலங்கா ரங்களைக் காணும். பிருந்தாவனம் மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் வருவதால், தில்லி பல கலாச்சார நிகழ்ச்சி களைக் காணும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டார் ஹோட்டல், விடுதிகள் வர்த்தகத்தில் முதலாளிகள் தீவிரம்
ராமர் கோவில் திறப்பை யொட்டி, மும்பை, தில்லி, ஹைதராபாத், சென்னை, பெங்க ளூரு, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களை அயோத்தி யுடன் இணைக்கும் வகையில் புதிய விமான சேவைகள் தொடங்கி யுள்ளன. அயோத்தியில் மகரிஷி வால் மீகி பெயரில் புதிய சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்தார். புதிய அயோத்தி ரயில் நிலையமும் திறக்கப்பட்டது. இத்து டன் அயோத்தியில் நீர்வழி மெட்ரோ படகு போக்குவரத்தும் ஜனவரி 22 அன்று தொடங்கப்படுகிறது.
லக்னோவில் இருந்து புதிதாக ஹெலிகாப்டர் போக்குவரத்தும் தொடங்கப்படுகிறது. இந்நிலையில், அயோத்தியில் ஹோட்டல்கள், குடியிருப்பு வளா கங்கள் ஆகியவற்றை புதிதாக அமைப்பதற்கு ரியல் எஸ்டேட் நிறு வனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. பாலிவுட் மெகா ஸ்டார் அமி தாப் பச்சன் ராமர் கோயிலில் இருந்து 15 நிமிடங்கள் தொலை வில் அமைந்துள்ள ‘தி சரயு’ வளா கத்தில் ஒரு வீட்டு மனையை வாங்கி யுள்ளார்.
அதன் மதிப்பு ரூ.14.5 கோடி ஆகும். மும்பை சார்ந்த ‘தி ஹவுஸ் ஆப் அபிநந்தன் லோதா’ என்ற நிறுவனம் தி சரயு வளா கத்தை உருவாக்கியுள்ளது. இதுதவிர சரயு நதிக்கரை யோரம் பல 5 ஸ்டார் ஹோட்டல்கள் கட்டப்படுகின்றன. அயோத்தியில் 110-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹோட்டல்கள், லாட்ஜ்களை கட்டு வதற்கு முதலீட்டாளர்கள் இடங் களை வாங்கியுள்ளனர். ராமர் கோவில் கட்டுமானத்துக் குப் பிறகு அயோத்தியில் நிலத்தின் விலை நான்கைந்து மடங்கு அதி கரித்துள்ளது. அயோத்தியை ஸ்மார்ட் நகராக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கோவில் அறங்காவலர் பிம்லேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா தெரிவித் துள்ளார்.