மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ள நிலையில், ராமர் கோவில் திறப்பு மூலம் பாஜக பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. அடுத்து குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இந்து - முஸ்லிம் இடையே பிளவை ஏற்படுத்தும் முனைப்பில் மோடி அரசு படுதீவிரமாக களமிறங்கியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம்
கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம் பர் 31க்கு முன்பு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக இந்தி யாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கி யம், பெளத்தம், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்க ளைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கியும், அந்த நாடு களிலிருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்களுக்கு மட் டும் குடியுரிமை மறுத்தும் குடி யுரிமை திருத்தச் சட்ட மசோதா (CAA) 2019 டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 12-ஆம் தேதி அப்போ தைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவசர சட்டம் போல உட னடியாக ஒப்புதல் அளித்தார். இதை யடுத்து அந்த சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங் கள் நடத்தப்பட்டன.
நாடு முழுவதும் தொடர் போராட் டங்கள் வெடித்ததால், சிஏஏ சட்ட விதிகளை ஒன்றிய மோடி அரசு அமல்படுத்தாமல் இருந்தது. தற் போது, மக்களவை தேர்தல் நெருங்குவதால், கடந்த சில நாட்க ளாகவே ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித் ஷா குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அடிக்கடி பேசி வருகிறார். கடந்த மாதம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா வில், “குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்பது நாட்டின் சட்டம் என்ப தால், இந்தச் சட்டத்தை ஒன்றிய அரசு கண்டிப்பாக அமல்படுத்தும். அதை அமல்படுத்துவதை யாரா லும் தடுக்க முடியாது” என கொக்க ரித்தார்.
ஒன்றிய அரசு அதிகாரி
இந்நிலையில் மக்களவை தேர் தல் அறிவிப்புக்கு முன்பாகவே சிஏஏ விதிமுறைகள் அறிவிக்கப் படும் என பெயர் கூற விரும்பாத ஒன்றிய அரசு மூத்த அதிகாரி ஒரு வர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகை யில், “விதிமுறைகள் வெளியிடப் பட்டதும், சட்டம் செயல்படுத்தப் பட்டு தகுதியானவர்களுக்கு இந் திய குடியுரிமை வழங்க முடியும். சிஏஏ சட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேல் தாமதமாகிவிட்டதால், அதனைச் செயல்படுத்துவதற்கு விதிமுறை கள் அவசியம். எனவே மக்கள வைத் தேர்தல் அறிவிப்புக்கு முன் பாகவே, சிஏஏ விதிமுறைகள் அறி விக்கப்படும். விதிமுறைகள் தயா ராக இருக்கின்றன. ஆன்லைன் போர்ட்டலும் நடைமுறையில் இருப்பதால் முழு செயல்முறை யும் ஆன்லைனில் இருக்கும். விண் ணப்பதாரர்கள் பயண ஆவணங் கள் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்த ஆண்டை அறிவிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களிட மிருந்து எந்த ஆவணமும் கேட்கப் படாது. முக்கியமாக ஏற்கெனவே குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர் கள் புதிதாக விண்ணப்பிக்க வேண் டிய அவசியமில்லை” எனக் கூறி னார்.
சீத்தாராம் யெச்சூரி கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகை யில், “குடியுரிமை திருத்தச் சட் டம் (சிஏஏ) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு பல ஆண்டு களாகிறது. இதுவரை சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் வகுக்கப்படாத நிலையில், தற் போது விதிகள் விரைவில் வெளி யிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடாளு மன்றத் தேர்தல் வர உள்ளதை முன் னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தேர்தலின்போது மக் களை மத ரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய வேண் டும் என்பதே இதன் நோக்கம் என் பது தெளிவாகிவிட்டது. இது மக் களை கூர்மையாக பிளவுபடுத் தும்” என அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு எச்சரிக்கை
பீகார் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில்,”ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா சிஏஏ அமல்படுத்துவதை பற்றி அடிக்கடி பேசி வருகிறார். சிஏஏ தொடர் பான விஷயங்கள் சில நேரங்க ளில் பலூன் போல வெளியிடப்படு கின்றன. ஆனால் பாஜகவின் திட் டம் எதுவும் நடக்காது. தேர்தல் நெருங்குவதால் இந்து-முஸ்லிம் மக்களிடையே மோதலை கிளப்ப பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.