india

img

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒமைக்ரான் பரவல் காரணமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் அதிவேகமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு  கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்துள்ளது. எனினும், தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இந்நிலையில், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைவிட 94 சதவீதம் அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

;