டிசம்பர் அன்று தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தையும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. டிசம்பர் 4 அன்று தில்லியில் நடைபெற்ற தலித் உரிமை பாதுகாப்புக்கான பேரணி - குடியரசுத் தலைவரிடம் மனுக் கொடுப்பது என்ற நிகழ்ச்சியையொட்டி இந்த வாய்ப்பு அமைந்தது.
சுமார் 2ஆயிரம் கோடி ரூபாய் செல வழித்து மோடிஅரசால் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடம் பார்த்தவுடன் அதிர்ச்சியையே அளித்தது. நம் மனதில் மோடியின் பேச்சும், சங்கிக ளின் வித்தார விளம்பரமும் ஏற்படுத்தி யிருந்த பிம்பம் அந்த கட்டிடத்தை நேரில் பார்த்தவுடன் தகர்ந்தது, நொறுங்கியது.
யானையைப் பார்க்கப் போகி றோம் என்ற எதிர்பார்ப்புடன் சென்ற ஒரு சிறுவன் முன்பு ஒரு பூனை வந்து நின்றால் அக்குழந்தையின் மனோ பாவம் எப்படி இருக்குமோ அப்படிப் பட்ட நிலை.
வெறும் செங்கற்களைக் கொண்டு எழுப்பப்பட்ட பெரிய சுவர்கள், அதற்கு ஒரு கட்டிட வடிவம். அதற்குள் மக்கள வை செயல்படுவதற்கான ஒரு வளா கம், மாநிலங்களவை செயல்படுவ தற்கான ஒரு அரங்கம். சுற்றிலும் அங்கு பணிபுரிபவர்களுக்கான அலு வலகங்கள். கட்டிடத்தின் மேற்கூரை யில் பாஜகவின் தாமரைச் சின்னத்தை வெளிப்படுத்துகிற விதத்திலான கூரை அமைப்பு.
50 ஆண்டுகளுக்கு முன்பு 1974இல் முதன் முதலாக நம்மு டைய பழைய நாடாளுமன்றக் கட்டி டத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தி ருந்தது. அந்த இளம் வயதில் நமது நாடாளுமன்றக் கட்டிடம் ஒரு கம்பீர மான, வசீகரமான கட்டிடக் கலையின் சிறப்பு அம்சங்களோடு மனதை ஈர்க்கும் அழகியல் அம்சங்களோடு பார்த்து ரசிக்கச் செய்தது. இன்றும் அந்தக் பழைய கட்டிடம் அதே கம் பீரத்துடன் அங்கே நிற்கிறது.
1974இல் ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் அமைந்துள்ள சிகார் என்ற இடத்தில் நடைபெற்ற அகில இந்திய விவசாய சங்க மாநாட்டிற்கு, தமிழ்நாட்டின் மூத்த தலைவர்கள் என்.சங்கரய்யா, என்.வரதராஜன், கே.பி.ஜானகியம்மாள், ஆர்.ராமராஜ், வி.ஏ.கருப்பசாமி ஆகி யோருடன் பிரதிநிதியாக சென்றி ருந்தேன்.
நாங்கள் தில்லியில் தங்கியிருந்த போது, அன்புத் தோழர் ஏ.கே.கோபா லன் அவர்கள் நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக இருந்தார். காங்கிரசுக்கு அடுத்து மார்க்சிஸ்ட் கட்சியே அதிக நாடாளு மன்ற உறுப்பினர்களை கொண்டி ருந்ததினால் தோழர் ஏ.கே.கோபாலன் அவர்களே எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். அவரது ஏற்பாட்டின் அடிப்படையில் நாங்கள் நாடாளு மன்றத்தை பார்ப்பதற்காக சென் றோம்.
பழைய கட்டிடம், அடிமை இந்தியா வில் பிரிட்டிஷாரால் கட்டப்பட்டதுதான். ஆனால் ஒரு பெரிய தேசத்தின் நாடா ளுமன்றம் எப்படி இருக்க வேண்டு மென்பதனை மனதில் நிறுத்தி இந்திய தேசத்தின் மரபை, பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதத்தில் அந்தக் கட்டிடத்தை எழுப்பியிருந்தார்கள். இந்திய நாட்டின் இந்து, முஸ்லிம் என்ற இருதரப்பிலும் உள்ள கட்டிட பொறியியல் வல்லுநர்களையும் ஆங்கிலேய வல்லுநர்களையும் பங்கெடுக்க வைத்து அற்புதமான கட்டிடக் கலை நுணுக்கத்தோடு காண்ப வர்களை ஈர்க்கும் விதத்தில், அதைக் காணும் ஒவ்வொரு இந்தியரும் இது என் தேசத்தின் நாடாளுமன்றம்; என் தேசத்து மக்களின் அனைத்து வித மான உரிமைகளையும் நிலை நிறுத்தும் மன்றம்; இங்கே என் மக்க ளின் அனைத்துப் பிரச்சனைகளும் மக்கள் பிரதிநிதியினால் விவாதிக்கப் படுகிறது, ஜனநாயகப் பூர்வமாக தீர்வு செய்யப்படுகிறது என்ற நம்பிக்கையு டன் அந்தக் கட்டிடத்தை காண முடிந்தது. நான் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும், அரசியல் ரீதியாக மாறுபட்ட காங்கிரஸ் கட்சி அங்கே அதி காரத்தில் இருந்தாலும், என் மனதில் நான் மேலே குறிப்பிட்ட எண்ணம் தான் ஏற்பட்டது.
அந்த பழைய வளாகத்தின் முன்பு தான் இன்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் சிலையும், சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் சிலையும் நிறுவப்பட்டுள்ளன. அந்த கம்பீரமிக்க பழைய நாடாளுமன்ற வளாகத்தை இன்று நாட்டை ஆளுகிற மோடி கூட்டம் அதானிக்கு அருங்காட்சியமாக குத்தகைக்கு விட்டுவிட்டது. இதைவிட இந்தியாவிற்கு வேறு அவமானம் இருக்க முடியாது. கடந்த கால இந்தியா வின் பாரம்பரியத்தையும், வரலாற்றை யும் நிலைநிறுத்த வேண்டும் என்ற எந்த சிந்தனையும் இல்லாதவர்கள் மோடியின் காவிக் கூட்டம்.
தங்களது துரோகங்களை அம்பலப்படுத்தும் கடந்த கால வர லாறை அவர்கள் விரும்பவில்லை. இன்றுள்ள தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தங்களது காலத்திலி ருந்து வரலாற்றை துவக்குவது போல் நடவடிக்கைகளை மேற்கொள்கி றார்கள்.
வரலாற்றை பிரதிபலித்த பாபர் மசூதியை இடித்ததில் இருந்தே இது துவங்கிவிட்டது. அதைப் பயன்படுத்தி இந்து, முஸ்லீம் மோதல்களை உரு வாக்கி தேச அரசியலை திசை திருப்பி, இவர்களால் அதிகாரத்திற்கு வர முடிந்தது. இன்று அந்த இடத்தில் ராமருக்கு புதிய கோவிலை கட்டி, திறப்பு விழாவிற்கு தேதியும் குறித்து விட்டார்கள். எனவே பழைய இந்தியா வின் பாரம்பரியம், அதன் உண்மை வரலாறு, அதனுடைய பண்பாட்டு நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் செய்வது என்பதுதான் ஆர்எஸ்எஸ் சிந்தனை.
2000 கோடி ரூபாயில் ஒரு நாடாளு மன்றக் கட்டிடத்தை கட்ட அவசர அவசரமாக முடிவு எடுத்தார்கள். அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் உடனே செய்து முடித்தார்கள்.
அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இந்தக் கட்டிடத்தை காண்ட்ராக்ட் விட்டு அவர்கள் ஏராளமான லாபத்தை ஈட்டுவதற்கும், காவிக் கூட்டத்திற்கு பெரும் கமிஷன் கிடைப்பதற்கும் தான் இந்தக் கட்டிடம் உதவியுள்ளது என்ப தைத் தான் காண முடிந்தது.
இதுகுறித்து முகநூலில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அதற்கு ஒரு நண்பர் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். ‘அரளிச் செடியிலிருந்து ரோஜா பூக்கள் வரும் என்று எதிர்பார்த்தால் அது தவறு. அரளிச் செடி அரளிச் செடி தான். அதிலிருந்து வரும் பூக்கள் அர ளிப் பூக்களாகத்தான் இருக்கும். அதன் அனைத்து பகுதிகளுமே விஷத்தன்மை கொண்டது. மனித சாவுக்கு வழிவகுக்கக்கூடியது’ என்று பதிவிட்டிருந்தார்.