india

img

பீகாரில் மாடு திருடியதாக கூறி முஸ்லிம் இளைஞர் அடித்துக்கொலை.... இந்துத்துவா கும்பல் கொலைவெறியாட்டம்

பாட்னா:
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதலே, நாடு முழுவதும் மாட்டின் பெயரால் மனிதர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, பாஜக ஆளும்மாநிலங்களில் முஸ்லிம் களும், தலித்துக்களும் குறிவைத்து படுகொலை செய் யப்படுகின்றனர்.

அந்த வகையில், பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடக்கும் பீகார்மாநிலத்தில், முகமது ஆலம்கிர் என்ற 32 வயது முஸ்லிம் இளைஞர், ஸ்ரீகாந்த் ராஜ் என்பவருக்குச் சொந்தமான எருமை மாட்டை திருட முயன்றதாக கூறி, பலமணி நேரம் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.தலைநகர் பாட்னா அருகேயுள்ள புல்வாரிஷரிப் என்ற இடத்தில், டிசம்பர் 16-ஆம் தேதி அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில்படுகாயம் அடைந்த முகமதுஆலம்கிரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்தற்போது இறந்து போயிருக்கிறார்.இந்த சம்பவத்திற்கு பீகார் அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் எழுப்பியநிலையில், குற்றவாளிகளைதாங்கள் கைது செய்துவிட்டதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.

;