india

img

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா- முகக்கவசத்தை மீண்டும் கட்டாயமாக்கிய தில்லி

கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் தில்லியில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்க எண்களில் பதிவாகி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக 500-க்கு மேல் பதிவாகி வருகிறது. இதனை அடுத்து தில்லி பேரிடர் மேலாண்மை அமைப்பின் ஆலோசனை கூட்டமானது நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தலைநகர் தில்லியில் மீண்டும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியவில்லை என்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கவும், முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனி நபர் இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அடிப்படையான விதிமுறைகளை மீண்டும் கொண்டு வரவும், மருத்துவமனைகளில் உயர்மட்ட கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.