india

img

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு.... பஞ்சாப் சிறைத்துறை அதிகாரி ராஜினாமா....

அமிர்தசரஸ்:
விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியை முற்றுகையிட்டு பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி லக்மிந்தர் சிங் ஜக்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வமான கடிதத்தை ஞாயிறன்று தலைமைச் செயலாளருக்கு  அனுப்பி வைத்துள்ளார். இதை பஞ்சாப் காவல்துறை உறுதி செய்துள்ளது.இதுகுறித்து டிஐஜி லக்மிந்தர் சிங் ஜக்கர் கூறுகையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து அமைதியாகப் போராடி வரும் எனது விவசாய சகோதரர்களுக்கு ஆதரவாக எனது வேலையை நான் ராஜினாமா செய்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு நாடுகளில் ஆதரவு பெருகி வருகிறது.

;