india

img

நாடாளுமன்றத்துக்கு டிராக்டர் ஓட்டி வந்த ராகுல் காந்தி.....

புதுதில்லி:
ஒன்றிய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவி்த்தும், விவசாயிகள் பிரச்சனையில் தீர்வு காணவும் வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தி திங்களன்று டிராக்டர் ஓட்டி நாடாளுமன்றத்துக்கு வந்தார்.ஒன்றிய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் தில்லியின் புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியிலிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு தீர்வு காண விவசாயிகள் மற்றும் ஒன்றிய அரசு இடையே 12 சுற்றுப் பேச்சு நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நடைமுறைப்படுத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் தடைவிதித்து, அந்தச் சட்டங்களை ஆய்வு செய்யக் குழு அமைத்துள்ளது.இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காணவும் வலியுறுத்தி, வயநாடு எம்.பி.யும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி திங்களன்று டிராக்டர் ஓட்டிக் கொண்டு நாடாளுமன்றத்துக்கு வந்தார்.

அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: ‘‘நான் விவசாயிகளின் சார்பில் அவர்களின் கருத்துக்களை நாடாளுமன்றத்துக்கு தாங்கி வந்துள்ளேன். விவசாயிகளின் குரல்களை ஒன்றிய அரசு நசுக்குகிறது, நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சனை பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை.வேளாண் சட்டங்கள் போர்வையில் இருக்கும் கறுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். ஒன்றிய அரசு கொண்டு வந்தபுதிய வேளாண் சட்டங்கள் சில தொழிலதிபர்களுக்கு மட்டுமே பயன் அளிக்கும் என இந்த தேசத்துக்கே தெரியும்.ஒன்றிய அரசின் கூற்றின்படி, விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், போராட்டம் நடத்தும் விவசாயிகள் அனைவரும் தீவிரவாதிகள். ஆனால், உண்மையில், விவசாயிகளின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

;