india

img

கொரோனா தடுப்பூசி... ராகுல் காந்தி குற்றச்சாட்டு...

புதுதில்லி:
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக நடந்து வருகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., குற்றம்சாட்டியுள்ளார்.கொரோனா பெருந்தொற்று விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்று ஒன்றிய பாஜக அரசு மீது  ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.  இந்நிலையில் ராகுல் காந்தி ஞாயிறன்று தனது டிவிட்டரில் தடுப்பூசிகள் எங்கே? என ஆங்கிலத்தில் ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.  மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக நடந்து வருகிறது.  இந்தத் தேசத்தின் மனதை, மக்களின் மனதை புரிந்து கொண்டவராக இருந்திருந்தால், தடுப்பூசி செலுத்தும்நிலை இப்படி இருந்திருக்காது என்றும்  பிரதமர் மோடியை சாடியுள்ளார்.

;