india

img

சிஆர்பிஎப்பின் சீருடையை மாற்ற திட்டம்.... தலைமை அதிகாரி தகவல்

புதுதில்லி:
மத்திய பாதுகாப்புப் படையான சிஆர்பிஎஃப்-பின்  காக்கி சீருடையை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய துணை ராணுவப்படையான சிஆர்பிஎப் சீருடையை மாற்றுவது குறித்து கருத்துகள் கேட்டு சிஆர்பிஎப் தலைமை இயக்குநர் ஜெனரலான ஏ.பி.மஹேஸ்வரி சுற்றறிக்கை வெளியிட்டார். மேலும் இதுகுறித்து அவர் இணையதளம் வழியாக தன் படை அதிகாரிகளிடம் பேசினார்.அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தற்போது நம் படையினர் அணியும் காக்கிசீருடையானது மற்ற மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர் அணிவதைப் போன்று மிகவும் சாதாரண மாக உள்ளது.இதே காக்கி சீருடையை தபால்துறை யினர் முதல் எல்பிஜி சமையல் எரிவாயு விநியோகம் செய்பவர் வரையும் கூட அணிகின்றனர். இந்தவகையில், சிஆர்பிஎப் படையினர் காக்கி சீருடையும் சாதாரணமாக இல்லாமல், அதற்கு தனி அடையாளம் அமைக்கும் வகையில் இருக்க வேண்டும். எனவே, நமது படையினருக்கு காக்கி அல்லாத புதிய சீருடை தனி அடையாளம் பெறும் வகையில் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

==குறிப்பு: முகப்பு படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தற்போதுள்ள சீருடை==

;