india

img

கேரள வெற்றி: சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வாழ்த்து.....

புதுதில்லி:
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றிபெற்றிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெரிய அளவில் வெற்றியை, இடது ஜனநாயக முன்னணிக்கு அளித்துள்ள மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறது. இடது ஜனநாயக முன்னணி, உள்ளாட்சி அமைப்புகளின் மூன்றுஅடுக்குகளிலும் பெரிய அளவில் வெற்றியை ஈட்டியுள்ளது. இடது ஜனநாயக முன்னணி, மொத்தம் உள்ள ஆறு மாநகராட்சிகளில் ஐந்தையும், 14 மாவட்ட பஞ்சாயத்துக்களில் 11இல் முன்னணியிலும் உள்ளது.

கேரள மக்கள், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு தங்கள் ஒப்புதலை அளித்திருப்பதை இதன்மூலம் பதிவு செய்திருக்கிறார்கள். 2018இல் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் கோவிட்-19 கொரோனாவைரஸ் தொற்றைக் கையாண்ட விதம் ஆகியவை குறித்தும்மாநில அரசாங்கமும், உள்ளாட்சி அமைப்புகளும் செய்திட்டவேலைகளையும் கேரள மக்கள் பாராட்டியிருக்கிறார்கள்.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், பாஜகவும் மற்றும் அதன் வலதுசாரி ஊடகங்களும்,பாஜக-வின் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கிடும் புலனாய்வு அமைப்புகளும் இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராகவும், அதன் தலைமைக்கு எதிராகவும் கட்டவிழ்த்துவிட்டஅடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை மக்கள் வலுவானவிதத்தில் நிராகரித்திருக்கின்றனர்.  இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.(ந.நி.)

;