india

img

வேகமாக பரவும் ஒமைக்ரான் : மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்....

தில்லி 
5 மடங்கு வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் மிக குறுகிய காலத்தில் ஆயிரத்துக்கும் (இதுவரை 1,431 பேர்) மேற்பட்ட நபர்கள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களில் 40% பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஒன்றிய சுகாதாரத்துறை மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அரசு மற்றும் தனியார் ஹோட்டல்களில் சிகிச்சை மேற்கொள்ளும் வசதியை முன்னெச்சரிக்கையாக செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்படும் நபர்களுக்கு பெரும்பாலும் வீட்டுத் தனிமை தேவைப்படும் என்பதால் அதற்காக தனி கட்டுப்பட்டு அறை அமைக்கவும் ஒன்றிய அரசு அறிவுறுத்தல்.

;