india

img

விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்

புதுதில்லி:
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும் வெளிநாட்டு கைக்கூலிகள் என்றும் மத்திய அமைச்சர்கள் துவங்கி, பாஜகவின் உள்ளூர் தலைவர்கள் வரை கொச்சைப்படுத்தி வருவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.“விவசாய சட்டங்களை ஆதரிக்கின்ற தலைவர்களை உங்கள்கிராமங்களுக்குள் நுழைய விடாதீர்கள். விவசாயிகளின் உணர்வுகளை, வாழ்வாதாரப் போராட்டங்களை கொச்சைப்படுத்துவோரை புறக்கணிப்பு செய்யுங் கள்” என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோவிந்த் சவுத்ரி பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர்அம்ரீந்தர் சிங், சிரோமணி அகாலிதளத்தின் விவசாயிகள் பிரிவுதலைவர் சிகந்தர் சிங் ஆகியோரும் பாஜக பிரச்சாரத்தைக் கண்டித்துள்ளனர்.“தில்லியில் போராடுவது பஞ்சாப் விவசாயிகள் மட்டும் அல்ல. பாஜக ஆளும் ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களின் விவசாயிகளும் போராட்டக்களத்தில் இருக் கின்றனர். இவர்கள் அனைவருமே நக்சல்கள் எனில் நீங்கள்ஆட்சி செய்யும் மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு அந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது என்று அர்த்தம்” என்று பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், பாஜகவைச் சாடியுள்ளார்.“உழைத்து வாழும் விவசாயிகள் மீது எளிதாக ஏதேனும் ஒரு முத்திரை குத்திவிட்டுப் போகும் போக்கை, பாஜக கைவிட வேண்டும்; இல்லாவிட்டால், விவசாயிகளைக் கொச்சைப் படுத்தும் தலைவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப் படும்” என்று அகாலிதளம் தலைவர் சிகந்தர் சிங்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

;