india

img

சுவர் இடிந்து விழுந்து ராணுவ அதிகாரி, 2 ராணுவ வீரர்கள் பலி...

கதுவா:
காஷ்மீரில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு ராணுவ அதிகாரி, 2 ராணுவ வீரர்கள் என 3 பேர் பலியாகினர். காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் அமைந்துள்ள மச்செடி ராணுவ முகாமில் வெள்ளியன்று மாலை நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்துப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், பில்லாவர் பகுதியில் உள்ள மச்செடி ராணுவ முகாமின் படைவீரர்களுக்கான குடியிருப்புச்சுவர் வெள்ளிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இதில் ராணுவத்தினர் 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக ஒரு மீட்பு நடவடிக்கைதொடங்கப்பட்டு,  சிக்கியிருந்த வீரர்கள் ஆபத்தான நிலையில் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில், ஹரியானா மாநிலம்  சோனிபாட்டைச் சேர்ந்த ஜே.சி.ஓ. எஸ்என் சிங் (45), ஜம்மு-காஷ்மீர் சம்பாவைச் சேர்ந்த நாயக் பர்வேஸ் குமார் (39) உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவித்தனர்.
 

;