புதுதில்லி:
ஆந்திர மாநிலம் எளூரு என்னும் நகரில் மர்மநோயால் மக்கள் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டதற்கு, உடல்நலத்திற்குத் தீங்கான பூச்சிமருந்துகள் மூலம் விளைவிக்கப்பட்ட தக்காளி, கத்தரிக்காய் போன்ற வையே காரணம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில்எளூரு என்னும் நகரிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மக்கள் மத்தியில் திடீரென்று மர்ம நோய்கள் தாக்கின. இதற்கான காரணத்தைக் கண்டறிய எய்ம்ஸ் மருத்துவமனை விஞ்ஞானிகளும், தேசிய ஊட்டச்சத்து நிலையத்தின் அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நோயாளிகள் உட்கொண்ட உணவு குறித்து ஆய்வு செய்தனர். பின்னர், உடல்நலத்திற்குத் தீங்கு பயக்கக்கூடிய அம்சங்கள் அடங்கிய பூச்சிமருந்து தெளிக்கப்பட்ட தாவரங்களிலிருந்து விளைந்த தக்காளி, கத்தரிக்காய்களை எளூரு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சாப்பாட்டில் சேர்த்து உட்கொண்டதே காரணம் என்று அறிக்கை அளித்துள்ளனர். (ந.நி.)