india

img

மியான்மரில் திடீர் நிலநடுக்கம்

மியான்மரில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
மியான்மர் நைபிடா பகுதியில் இன்று காலை 7.56 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் யாங்கூனில் இருந்து 260 கிமீ சுற்றளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 
 

;