india

img

தமிழ்நாட்டில் 8.83 சதவீத தடுப்பூசி மருந்துகள் வீணடிப்பு..... மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்...

புதுதில்லி:
பல்வேறு மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி மருந்துகளை குறிப்பிட்ட அளவுவீணடித்துள்ளதாக மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் கவலையுடன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 8.83 சதவீத தடுப்பூசிமருந்துகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. அசாம் மாநிலத்தில் 7.7 சதவீத கொரோனா தடுப்பூசி மருந்து வீணாகி இருக்கிறது.மணிப்பூரில் 7.44 சதவீதம், ஹரியானாவில் 5.72 சதவீதம், பஞ்சாபில் 4.98 சதவீததடுப்பூசிகள் ,தலைநகர் தில்லியில் 3.96 சதவீதம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. பீகார், ராஜஸ்தான், நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் 4 சதவீதத்திற்கும் மேல் தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட் டுள்ளது.அனைத்து மாநிலங்களிலும் சுமார் 1 கோடி கொரோனாதடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 10 லட்சமும் மகாராஷ்டிராவில் 9 லட்சமும் பீகாரில் 7.5 லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என்றுஅறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;