india

img

5 ஆம் சுற்று பேச்சுவார்த்தை.... அரசு உணவை புறக்கணித்த விவசாயிகள்....

புதுதில்லி:
விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தில்லி எல்லையில் நடத்தி வரும் போராட்டத்தை ஒட்டி விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசுஇடையே சனிக்கிழமை ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது.புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடந்து வரும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளின்போது தாங்கள் முன்வைத்த ஒவ்வொரு கோரிக் கைக்கும் அரசின் பதில் என்ன என்பதை அளிக்கவேண்டும் என்று விவசாயிகள் பிரதி
நிதிகள் கேட்டதாகவும், இதற்கு மத்திய அரசுஒப்புக் கொண்டதாகவும் ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது தங்களுக்கு தீர்வுதான் வேண்டும் என்றும், அரசு உத்தரவாதம் தேவையில்லை என்றும்விவசாயிகள் கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.ஏற்கெனவே விவசாயிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மீது அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்பதையும் விவசாயிகள் கேட்டுள்ளனர். முந்தைய சுற்றுகளைப் போலவே, இந்த முறையும் விவசாயிகள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை இடைவேளையின்போது அரசு அளித்த உணவைப் புறக்கணித்துவிட்டு தாங்கள் கொண்டு வந்த உணவையே சாப்பிட்டுள்ளனர்.அவர்களுக்காக உணவு எடுத்துக்கொண்டு வாகனம் ஒன்று பேச்சுவார்த்தை நடக்கும் இடத்துக்கு வந்திருந் தது.தில்லியின் டிகரி எல்லைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து உரையாடினார் பிபிசி இந்தி சேவைசெய்தியாளர் பியுஷ் நாக்பால். தம்மிடம் பேசிய விவசாயிகள், இன்றைய பேச்சுவார்த்தை நல்ல முடிவைக் கொண்டுவரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்கிறார் அவர்.

;