சென்னை,ஏப்.28- கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது யார் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க மாநில முதல மைச்சர்களுடன் பிரதமர் மோடி கானொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார். இதற்கு பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநில நிதியமைச்சர் பதில் அளிக்கை யில், எந்த ஒரு மாநில அரசாக இருந்தாலும் வருமானம் இல்லாமல் செயல்படமுடியாது. தமிழ்நாட்டை பொருத்தவரை ‘எல்லோருக்கும் எல்லாம்’ கிடைக்க வேண்டும் என்பதுதான் திமுக அரசின் கொள்கை நிலைபாடு. வரி இல்லாமலும், வருமானம் இல்லாமலும் செலவு செய்ய முடியாது. நேரடி வரியாக இருந்தாலும், மறைமுக வரியாக இருந்தாலும் தொடர்ந்து வரி விதித்தால் சாமானிய மக்களையும் விவ சாயிகளையும் பாதிக்கும். பணவீக்கம் அதிகரிக்கும், பொருளாதாரம் பாதிக்கும். மக்களின் வாங்கும் சக்தி குறையும்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரிகள் பல மடங்கு அதி கரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒன்றிய அரசுக்கு வருமானம் பலமடங்கு அதி கரித்தாலும், அதற்கு இணையான அளவு மாநில அரசுகளுக்கு வருமான உயர்வு இல்லை. 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது (அடிப்படை விலை ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தபோதும்), ஒன்றிய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு 18.42 ரூபாயும்டீசல் மீது லிட்டருக்கு 18.23 ரூபாயும் கூடுதல் வரி விதிக்கிறது. 2014 ஆம் ஆண்டு பதவியேற்றபோது நடை முறையில் இருந்த வரிகளுடன் ஒப்பிடும் போது இந்த வரி உயர்வு 500 விழுக்காடாகும். இதனால் கிடைக்கும் மொத்த வருமானத்தையும் ஒன்றிய அரசே எடுத்துக்கொள்வது நியாயமா? ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு முன்பே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழ்நாடு அரசு குறைத்தது. அந்த குறைப்பின் மூலம் மக்களுக்கு லிட்ட ருக்கு ரூ. 3 குறைவாக நிவாரணம் கிடைத்தது. ஆனால் மாநிலங்கள் வரி களை குறைக்கவில்லை என்று பிரதமர் சொல்லுவதில் உண்மையில்லை.
ஒன்றிய அரசுக்கு மாநிலங்களிலிருந்து மொத்தமாக கிடைக்கும் 20 விழுக்காடு வரிவருவாயில் பகிர்ந்துகொடுக்காமல் இருப்பதுதான் கூட்டாட்சி தத்துவமா? எங்கள் மாநிலத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபாய் செல்கிறது என்றால் வெறும் 35 பைசாவை திருப்பிக் கொடுத்தாலும் எப்படி செலவிடவேண்டும் என்று நிபந்தனை விதிப்பதுதான் கூட்டாட்சித் தத்துவமா? தமிழக மக்களின் பணத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி களுக்கும் நீட் தேர்வு கொண்டு வந்து மாநில உரிமைகளை பறித்துக் கொள்வதுதான் கூட்டாட்சித் தத்துவமா? இப்போது சொல்லுங்கள் கூட்டாட்சி தத்துவத்தை தலைக்கீழாக மாற்றுவது யார்? அதை பின்பற்றாதவர்கள் யார்? என்பதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு நிதியமைச்சர் தெரிவித்தார்.