சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் திடீரென பெய்த கனமழையின் காரணமாக சுங்தாங் அணை உடைந்து லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள தீஸ்தா நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில் 23 ராணுவ வீரர்கள் உட்பட 102 பேர் வெள்ளபெருக்கில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. 23 ராணுவ வீரர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் 26 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏராளமானோரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் அவ்விடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
11 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு 22,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கி காண்மல் போனவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினரும், எல்லை சாலை அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.