வகுப்புவாதத்துக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
முகம்மது நபி குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “முகம்மது நபி குறித்த பாஜக செய்தித் தொடர்பாளரின் கீழ்த்தரமான கருத்துகளால், நமது மதிப்பிற்குரிய மதச்சார்பற்ற ஜனநாயகத்தை, உலகத்தின் முன் மீண்டும் ஒருமுறை இழிவுபடுத்தியுள்ளது சங்பரிவாரம். வகுப்புவாதத்துக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்