india

img

காங். மூத்த தலைவர் அகமது படேல் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்....

புதுதில்லி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் (வயது 71) எம்.பி.யின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள் ளனர். 

 அக்டோபர் 1 ஆம் தேதி கொரோனாவில் பாதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தாலும், கொரோனாவுக்கு பிந்தையபாதிப்புகளால் கடுமையாகபாதிக்கப்பட்டார்.  அகமது படேலின் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டநிலையில் அந்த பாதிப்புமற்ற உடல் உறுப்புகளுக்கும் பரவியது. இதையடுத்து, குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த 14 ஆம் தேதி  அகமது படேல் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவரது உடல் நிலையில்முன்னேற்றம் ஏற்படவில்லை.  இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அகமது படேல்நவம்பர் 25 புதனன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார். இந்தத் தகவலை அகமது படேலின் மகன் பைசல் படேல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அகமது படேலின் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;