கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்து வருவதால மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்து 589 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ''கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்து அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், வீடுகளில் சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் விதிக்கும் வகையில் கர்நாடக தொற்று நோய் தடுப்பு சட்டம் திருத்தம் செய்யப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகம் இல்லை சுகாதாரத்துறை தெரிவித்திருந்தாலும், பக்கத்து மாநிலத்தில் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.