india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டில் இதுவரை 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இதுவரை 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 479 பேர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் புதிதாக 825  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட ப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இதுவரை 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில்  சென்னை மாவட்டத்தில் 4 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், சேலம், திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், செங்கல் பட்டு, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து 6 பேர் குணமடைந்து ள்ளனர்.

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் காட்பாடி வரை இயக்கப்படும்
விழுப்புரம்,டிச.17- விழுப்புரம் - திருப்பதி முன்பதிவிவில்லா விரைவு ரயில் பொறியியல் பணி காரணமாக பகுதியளவு ரத்து  செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள் ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே  வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள்  நடைபெற்று வருகின்றன. இதனால், விழுப்புரத்திலி ருந்து திருப்பதி வரை இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டு காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.

விழுப்புரத்திலிருந்து தினமும் காலை 5.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு  ரயில் (வண்டி எண்: 16854) காட்பாடி - திருப்பதி இடையே டிசம்பா் 31-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து  செய்யப்படும். இதனால் இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

மறுமார்க்கத்தில்  திருப்பதி ரயில் நிலையத்திலி ருந்து தினமும் பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்படும் திருப்பதி- விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண்: 16853) திருப்பதி-காட்பாடி இடையே டிசம்ப 31-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்படும். இதனால் இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.30 மணிக்கு விழுப்பு ரத்துக்கு புறப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

மிக்ஜம் புயல் நிவாரணம்: மக்களுக்காக கட்டுப்பாட்டு அறை 
சென்னை,டிச.17- மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் வீடுவீடாக சென்று விநியோகிக்கப்பட்டது. டோக்கன்கள் கிடைக்கப் பெறாத மற்றும் குடும்ப அட்டை இல்லாத வெள்ள த்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நியாய விலைக் கடை களில், அதற்கென உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.. 

அடுத்து வரும் நாட்களில், நியாய விலைக் கடை களில் முற்பகல் 9 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் நிவாரணத் தொகை மற்றும் படிவம் வழங்கப்படும். மேற்படி நிவாரணத் தெகை பொதுமக்களுக்கு எவ்வித புகா ருக்கும் இடமின்றி வழங்கிடவும், புகார் எழும் சூழலில், அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு நல்கிடவும் ஏது வாக சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள  உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறை முதன்மைச் செயலாளர், ஆணையாளர் அலுவலகத்தில் டிச.17 முதல், காலை 8மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும். பொதுமக்கள் நிவாரணத் தொகை குறித்த தங்களது சந்தேகங்களை 044-2859 2828 மற்றும் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் எனத் அரசு தெரி வித்துள்ளது.

மோசடி குறுந்தகவலை நம்பி பணத்தை இழந்த ஐடி ஊழியர்
கிருஷ்ணகிரி,டிச.17-  கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், காரப்பட்டு பகுதியைச் சோ்ந்த மென்பொருள் பணியாள ரான  புனிதா (29) ஐதராபாத் நிறுவனத்தில் பணி யாற்றி வந்த நிலையில் தற்போது வீட்டிலிருந்து வேலை  செய்து வருகிறார், 

கடந்த மாதம் 6-ஆம் தேதி இவரது கட்செவிக்கு வந்த குறுந்தகவலில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டி ருந்தது. இதை நம்பி புனிதா அதிலிருந்த வங்கிக் கணக்கு களுக்கு ரூ.11.87 லட்சம் அனுப்பினார். அதன் பிறகு அந்த நபரை தொடா்பு கொள்ள முடியவில்லை.

அதேபோல் கிருஷ்ணகிரி, புதுப்பேட்டையை சேர்ந்த சித்திக் பாஷா (27). கடந்த மாதம் 3 ஆம் தேதி தன் கைப்பேசிக்கு வந்த குறுந்தகவலை நம்பி அதி லிருந்த வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 5.74 லட்சத்தை அனுப்பினார். சிறிது நேரத்திற்குள் அந்த நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.  ஒசூர், முதலியார் தெருவைச் சோ்ந்த விஜய் கிருஷ்ணராஜ் (22), ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.குறுஞ்செய்தியை நம்பி வங்கிக் கணக்குகளுக்கு ரூ.7.26லட்சம் அனுப்பி னார்.  பின்னா், அந்த மர்ம நபர் அவரால் தொடர்பு கொள்ள இயலவில்லை.பணத்தை பறிகொடுத்த 3 பேரும் கிருஷ்ணகிரி சைபா் கிரைம் காவல் துறையினரி டம் புகார் அளித்துள்ளனர்.