கொல்கத்தா திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா வில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் (31) பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், உண்மையான குற்றவாளி யை கைது செய்யக் கோரியும், மேற்குவங்க மருத்துவக்கல்லூரிகளில் பாதுகாப்பை பலப் படுத்தக் கோரியும், உயிரிழந்த மாணவிக்கு நீதி வழங்கக் கோரியும் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரிக்கு வெளியே மருத்துவ மாணவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவால் மாணவியின் பாலியல் கொலை வழக்கை தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அவசர சிகிச்சைப் பிரிவு மீது தாக்குதல்
இந்நிலையில், மருத்துவ மாணவி மீதான தாக்குதலை கண்டித்து ஆகஸ்ட் 14 அன்று ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மாணவர்களின் வேஷத்தில் மருத்துவமனைக் குள் புகுந்த மர்ம கும்பல், அவசர சிகிச்சைப் பிரி வில் மருத்துவ உபகரணங்களை அடித்து நொறுக்கியது. மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீதும், போலீஸ் வாக னங்கள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தப் பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 19 பேரை கொல்கத்தா காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நாடு தழுவிய போராட்டம்
மருத்துவ மாணவி படுகொலையைக் கண்டி த்து ஆகஸ்ட் 11 அன்று மருத்துவ மாணவர் கள், மருத்துவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், சனியன்று மீண்டும் நாடு முழுவதும் 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்து வர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் நடந்த கொடூரக் குற்றம் மற்றும் சுதந்திர தினத்தன்று போரா ட்டம் நடத்திய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரி விக்கும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். அவசர சிகிச்சைகளை கையா ளும் மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். ஆனால் வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக் கான சிகிச்சைகள் செயல்படாது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒன்றிய சுகாதாரத்துறை எச்சரிக்கை
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்ய ஒன்றிய சுகாதாரத் துறை மருத்துவ நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 6 மணி நேரத்திற்குள் எப்ஐஆர் பதிவு செய்வதற்கு மருத்துவ நிறுவனத் தலைவரே பொறுப்பேற்க வேண்டும். மருத்துவ பணியாளர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நிகழ்வதை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என மருத்துவ நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது யார்? திரிணாமுல், பாஜக கட்சியினரா?
ஆகஸ்ட் 14 அன்று ஆர்.ஜி.கர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா காவல்துறை கூறுகிறது. ஆனால் தாக்குதல் நடத்தியது மருத்துவ மாணவர்களே இல்லை என ஆர்.ஜி.கர் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட 19 பேர் யார்? அவர்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களா? இல்லை, அரசியல் ஆதாயத்திற்காக தாக்குதல் நடத்திய பாஜககாரர்களா? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஆனால் இதுதொடர்பாக மேற்கு வங்க அரசு விளக்கம் அளிக்க மறுத்து வருகிறது.