india

img

போலி வலைதளம் மூலம் ராமர் கோயிலுக்கு நன்கொடை... உ.பி. மாநிலம் லக்னோவில் 5 பேர் கைது....

லக்னோ:
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் பெயரில் போலி வலைதளத்தை உருவாக்கி அதன் மூலம் லட்சக்கணக்கில் நன்கொடை வசூலித்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் துவங்கிய போது, கூடவேநிதி மோசடிக் குற்றச்சாட்டுக் களும் துவங்கி விட்டன. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்நகரத்தில், நரேந்திர ராணா என்பவர் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) பெயரில் அலுவலகம் திறந்து, ராமர் கோயில் பெயரில் பல லட்சங்களை சுருட்டினார். இதில்ஒருவர் கைது செய்யப்பட் டார். 

அடுத்ததாக, ராமர் கோவில் அறக்கட்டளை வங்கிக்கணக்கில் இருந்தே, ரூ. 6 லட்சத்தை, ஆசாமிகள் சிலர்,கடந்த செப்டம்பர் மாதம் போலி காசோலை கொடுத்து கையாடல் செய்தனர். 2021 பிப்ரவரியில் ம.பி. மாநிலம் போபால் அசோகா கார்டனில் வகிக்கும் மணீஷ் ராஜ்புத் (30) என்பவர், அயோத்தி ராமர் கோயில் பெயரில் ‘ராம் ஜென்மபூமி சங்கல்ப் சொசைட்டி’ என்றதனி அமைப்பையே உருவாக்கி பல லட்சங்களை நன்கொடையாக வசூலித்து மோசடியில் ஈடுபட்டார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில்தான் நொய்டாவின் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்து கொண்டு, ராமர் கோயில்பெயரில் போலி வலைதளத்தை உருவாக்கி பல லட்சங்களை சுருட்டியதாக 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமானசெல்போன்கள், லேப்டாப்கள், 50-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டை பிரதிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமர் கோயிலுக்கு நிலம் வாங்கியதில், அறக்கட்டளை நிர்வாகிகளே பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;