india

மோடி அரசின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள் சிபிஐ(எம்) மத்தியக்குழு வெளியீடு 7

சொன்னது
“விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.”
“விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை
கள் (எம்.எஸ்.பி) சமீபத்திய ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளன.”
“மோடி அரசு விவசாயிகளுக்கு ஆதரவானது.”
“பயிர் காப்பீட்டுத் துறையில் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) பெரும் 
தாக்கத்தை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு உதவியுள்ளது.”
“மோடி அரசு விவசாயிகளுக்காக பல கடன் தள்ளுபடி திட்டங்களை செயல் படுத்தியுள்ளது.”
“பிரதமரின் கிசான் சம்மான் யோஜனா மூலம் பலரும் பயனடைந்துள்ளனர்.”
“கிராமப்புறங்களில் நிலம் கையகப்படுத்தும் கொள்கை மக்களுக்கு சாதக
மானது. ரெக்லார் சட்டம் அனைவருக்கும் பயனளிக்கும்.”
உண்மை நிலை என்ன?
l விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்ற பேச்சு சமீபத்திய ஆண்டு
களில் அரசாங்க ஆவணங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து மறைந்து போய் விட்டது. அரசின் 2011-12 மற்றும் 2018-19 ஆம் ஆண்டு நிலவர மதிப்பீட்டு ஆய்வு
கள், விவசாயக் குடும்பங்களின் சாகுபடி மூலம் கிடைக்கும் மாத வருமானம் ரூ.2,855லிருந்து ரூ.2,816 ஆக (அதாவது 1.4 சதவீதம்) வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
l 2003-04 மற்றும் 2012-13 க்கு இடையில், முக்கிய உணவு தானிய பயிர்களின் குறைந்த
பட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி) ஆண்டுக்கு சராசரியாக 8 சதவீதம் முதல் 9 சத
வீதம் வரை உயர்ந்தது, ஆனால் 2013-14 மற்றும் 2023-24 க்கு இடையில், முக்கிய 
உணவு தானிய பயிர்களின் எம்.எஸ்.பி ஆண்டுக்கு சுமார் 5 சதவீதம் மட்டுமே 
உயர்ந்தது. இடுபொருள் விலைகள் மிக வேகமாக உயர்ந்து வரும் நேரத்தில் இது நடந்துள்ளது. 
l மோடி அரசின் தவறான விலை நிர்ணய முறையால், குறைந்தபட்ச ஆதரவு விலை 
அறிவிக்கப்பட்ட பயிர்களில் குவிண்டாலுக்கு ரூ.500 முதல் ரூ.600 வரை விவ
சாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் தற்கொலை
l1997க்கும் 2022க்கும்இடையில் (அதன்பிறகு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தி
லிருந்து எந்த தரவுகளும் கிடைக்கவில்லை) விவசாயத் துறையில் 3.5 லட்சத்திற்கும் 
மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். இவற்றில் சுமார் 1,00,474 தற்கொலை
கள் 2014க்கும் 2022க்கும்இடையில்பதிவுசெய்யப்பட்டுள்ளன. இது மொத்த தற்கொலைகளின்எண்ணிக்கையில்பெரும்பங்காகும்.
l மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலம் குறிப்பாக விவசாயிகளுக்கு பேர
ழிவை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டில்விவசாயத்துறையில் 10,281 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த எண்ணிக்கை 2020இல் 10,677 ஆகவும், 2021இல் 10,881 ஆகவும், 2022 இல் 11,290 ஆகவும் அதிகரித்துள்ளது. 
பயிர் காப்பீடு
l முழுமையான பயிர் காப்பீட்டுத் திட்டம் என்பது ஒரு போதும் இருந்ததில்லை. 2016 ஆம் ஆண்டில், அரசாங்கம் PMFBY ஐ அறிமுகப்படுத்தியது, ஆனால் அதன் 
அமலாக்கம் தோல்வியடைந்துள்ளது.
l குறு விவசாயிகளில் பெரும் பகுதியினர் பிரீமியத்தை செலுத்த முடியாததால் இந்த 
திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். 
l பிரதமர் பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட பகுதி 2016-17ஆம் ஆண்டில் 570.8 லட்சம் ஹெக்டேரிலிருந்து 2022-23ஆம் ஆண்டில் 487.4 
லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. 
l PMFBY பயிர் காப்பீட்டுத் துறையை தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கார்ப்ப
ரேட் லாபவெறிக்கு திறந்து விட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் 2016-17 முதல் 2020-21 
வரை லாபமாக சுமார் ரூ. 24,350 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளன.
கடன் தள்ளுபடிகள்
lவிவசாயிகளுக்கான கடைசி தேசிய அளவிலான கடன்தள்ளுபடிதிட்டம் 2008இல் அறிவிக்கப்பட்டுசெயல்படுத்தப்பட்டது. ஜூலை 2022இல் பாரத ஸ்டேட் வங்கி நடத்திய ஆய்வில், 2014க்குப் பிறகு அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான கடன் 
தள்ளுபடி திட்டங்களின் சாத்தியமான பயனாளிகளில் 50சதவீதம் பேர்மட்டுமே
தள்ளுபடி பெற்றுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
l வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதில் விவசாயிகள் சிறந்து விளங்குகின்றனர். விவசாய வளர்ச்சி விகிதங்கள் மந்தமாக இருந்தாலும், விவசாய துயரம் பரவலாக இருந்தாலும், விவசாயத்தில் வராக்கடன் தொழில்துறையை விட கணிசமாக குறைவாக உள்ளது (மொத்தத்தில் 17.4 சதவீதம் மட்டுமே).
l கடந்த 10 ஆண்டுகளில், வங்கிகள் ரூ.15 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள் 
ளன. அதே நேரத்தில் விவசாயிகளிடமிருந்து வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய 
மொத்த தொகை, 18 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்படாமல் உள்ளது.
நிலம் கையகப்படுத்துதல்
l 2013 ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள் குடி
யேற்றத்தில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை (RFCTLARR) சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களால் விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர்.
l கார்ப்பரேட் கம்பெனிகளை சமாதானப்படுத்த, மோடி அரசாங்கம் 2014 டிசம்பர் 
29 அன்று RFCTLARR சட்டத்தில்திருத்தம் செய்து ஒரு அவசரச் சட்டத்தை நிறை
வேற்றியது. 2015ஆம் ஆண்டில், மோடி அரசு மக்களவையில் RFCTLARR திருத்த மசோதாவாக நிறைவேற்றியது. ஆனால் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய 
அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, எதிர்க்கட்சிகள் மாநிலங்கள
வையில் அதை நிறைவேற்றுவதைத் தடுத்தன. நிலம் கையகப்படுத்துதலுக்கு ஒப்புதல் மற்றும் சமூக தாக்க மதிப்பீட்டுத் தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கும் 
வகையில், பல மாநிலங்கள் RFCTLARR சட்டம், 2013இல் திருத்தங்களை மேற் 
கொண்டுள்ளன. இதன் விளைவாக, லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விவ
சாயம் அல்லாத நோக்கங்களுக்காக மாநிலங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலம் 
கொள்ளையடிப்பதை அனுமதிக்க வேண்டும் என்பதில் மோடி அரசு உறுதி
யாக உள்ளது. 
l சுதந்திரம் பெற்றதிலிருந்து ஆட்சி செய்த அரசுகளிலேயே மோடி அரசு விவசாயி
களுக்கு மிகவும் எதிரான, விவசாய விரோத மற்றும் கார்ப்பரேட் ஆதரவு அர
சாங்கமாகவே இருந்து வருகிறது. அதனால்தான் அரசாங்கத்திற்கு எதிரான விவ
சாயிகளின் போராட்டங்கள் வீச்சாகவும் தீவிரமாகவும் உள்ளன. 

விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு 
குரல் கொடுப்போம்! பாஜகவைத் தோற்கடிப்போம்!