கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 702 பேர் கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை தகவலின் படி மொத்த செயலில் உள்ள கோவிட் பாதிப்புகள் 4 ஆக அதிகரித்து ,மொத்தம் 4,097 ஆக எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 2 பேர், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் தில்லி தலா 1 என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
COVID -19 மீண்டும் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு மாநில மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு, அதன் நெறிமுறைகளையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.
இந்தியாவில் குஜராத்தில் 36, கர்நாடகாவில் 34, கோவாவில் 14, மஹாராஷ்டிராவில் 9, கேரளாவில் 6 ராஜஸ்தானில் 4 மற்றும் தமிழ்நாட்டில் 4 என மொத்தம் 109 JN -1 வகை கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தேசிய அளவில் குஜராத்தில் அதிகபட்சமாக 33% (மூன்றில் ஒரு பங்கு) தொற்று பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.