அமெரிக்க அருங்காட்சியகத்திலிருந்து 13 இந்திய சிலைகளை சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இந்திய கோயில்களிலிருந்து கடத்தப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் தொன்மையான பொருட்கள் ஆகியவைகளை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் இந்திய கலைப்பொருட்கள் மீட்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது அமெரிக்காவில் உள்ள ஏல் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கக்கூடிய அருங்காட்சியகத்தில் பழங்கால இந்திய சிலைகள் இருப்பதாக சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைதொடர்ந்து அங்கு சென்ற அதிகாரிகள், இன்று சுமார் 13 இந்திய சிலைகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடம் இருந்து வாங்கப்பட்டவை என தகவல் வெளியாகி உள்ளன.
அதனைதொடர்ந்து சுபாஷ் கபூரின் விற்பனைக்கூடத்தில் இருந்து நேரடியாகவும் அன்பளிப்பாகவும் பெறப்பட்டு இருப்பது விசாரணையில் உறுதியானது.
மேலும் மீட்கப்பட்ட இந்த சிலைகளில் தமிழ்நாட்டு கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சோழர் காலத்து நடனமாடும் சம்பந்தர் சிலையும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.