india

img

யோகி ஆதித்யாநாத் பேச்சுக்கு எதிர்ப்பு; மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

காஷ்மீர், கேரளா, மேற்குவங்காளம் போல உ.பி. மாநிலம் ஆகிவிடும் என சர்ச்சைகுரிய வகையில் பேசிய யோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புதனன்று, மாநில மக்களுக்கு வீடியோ மூலம் வாக்கு சேகரித்தார். அப்போது, "கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக அரசு, உங்கள் நம்பிக்கையை மனதில் வைத்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, அர்ப்பணிப்புடன் அனைத்தையும் செய்துள்ளது. ஐந்தாண்டுகளில் நிறைய நடந்துள்ளது. முதன்முறையாக அனைத்து கிராமங்களிலும் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேர மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

என் மனதில் உள்ள சில விஷயங்களை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். இந்த ஐந்து வருடங்களில் நமது மாநிலத்தில் நிறைய அற்புதங்கள் நடந்துள்ளன. இனிதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த ஐந்தாண்டு கால எனது முயற்சிக்கு, எனக்கு கிடைக்கும் ஆசீர்வாதமே உங்கள் வாக்கு. உங்கள் வாக்குதான் உங்கள் அச்சமற்ற வாழ்க்கைக்கு உத்தரவாதமாக இருக்கும். சிலர் உத்தரப் பிரதேசத்தை கைப்பற்றி ஆட்சி அமைக்க முயல்கிறார்கள் என்பதுதான் ஒரே கவலை. அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலோ, வாக்கு செலுத்துவதில் இருந்து கொஞ்சம் தவறினாலோ இந்த ஐந்தாண்டுகள் நான் செய்த உழைப்புகள் கெட்டுவிடும்.

காஷ்மீர், கேரளா மற்றும் மேற்குவங்கம் போல உத்தரப்பிரதேசம் போல மாறிவிடும்" என சர்ச்சைகுரிய வகையில் பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பதிவில், அவ்வாறு உத்திரப்பிரதேசம் கேரளா போல் மாறினால், அங்கு சிறந்த கல்வி, வாழ்க்கைதரம் , சமூக நலன் ஆகியவற்றை பெற முடியும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வெள்ளியன்று மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.