கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து 2 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கையிலிருந்து தப்ப முயன்றதாகக் கூறி 2 மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் காயமடைந்துள்ளனர்.