india

img

ஒன்றிய பாஜக அரசு மீது முன்னாள் ட்விட்டர் சிஇஒ பகீர் குற்றச்சாட்டு!

விவசாயிகள் போராட்டத்தின் போது, அரசை விமர்சிப்பவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க அழுத்தம் கொடுத்ததாக, ஒன்றிய பாஜக அரசு மீது முன்னாள் ட்விட்டர் சிஇஒ  குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

விவசாயிகளை பாதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட, ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

போராடிய விவசாயிகள் மீது ஒன்றிய பாஜக அரசு கொடூரமான தாக்குதலை நடத்தியது. போராட்ட களத்தில் கிட்டதட்ட 700 –க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிந்தபோதும், ஒன்றிய பாஜக அரசாங்கம் இரக்கம் காட்டவில்லை.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டத்தை

கைவிடுவதில்லை என விவசாயிகள் உறுதியாக இருந்தனர். இதனையடுத்து, விவசாயிகளின் போராட்டத்திற்கு அடிபணிந்து ஒன்றிய மோடி அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது.

அப்போது கூட இந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்காக திரும்பப்பெறாமல், வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் எங்களால் எடுத்துரைக்க முடியவில்லை அதனாலே திரும்ப பெறுகிறோம் என்று பாஜக தலைவர்கள் கூறினார்கள்.

மேலும், அடுத்தடுத்து நடக்க இருந்த பல மாநில தேர்தல்களை கருத்தில்கொண்டே ஒன்றிய பாஜக அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுள்ளது. வரும்காலங்களில் மீண்டும் மோடி அரசு இந்த சட்டங்களை அமல்படுத்த முயற்சி எடுக்கலாம் என்கிற அச்சத்தை எதிர்க்கட்சியினர் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் செய்தி ஒன்று  தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது  மோடி அரசு பாசிச குணத்தோடு செயல்பட்டதை அம்பலப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் முன்னாள் சிஇஒ ஜார்க் டோர்சே நேர்காணல் ஒன்றில் கூறியதாவது,

இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது,  போராட்டம் தொடர்பான பதிவுகள் மற்றும் அரசை விமர்சித்த ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மோடி அரசு அழுத்தம் கொடுத்தது;இந்தியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்படும் எனவும் ட்விட்டர் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்துவோம் எனவும்  எங்களுக்கு  எச்சரிக்கை விடுத்தனர் என்று ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஒ ஜாக் டோர்சே ஒன்றிய பாஜக அரசு மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.