நிலவின் தென் துருவ பகுதியில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்கிற பெருமையை பெற்றது இந்தியா.
சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தரை இறங்கியது.
சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு படிப்பினைகளை கற்று, மாற்றாங்களை செய்து சந்திரயான் -3 விண்கலத்தை வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டர் கலன் கடந்த கடந்த 17-ஆம் தேதி விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக சந்திரனில் லேண்டர் தரையிறங்கியது. சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார்.இதனைத்தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.