india

img

2016 -2022 வரை குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் 96% அதிகரிப்பு: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

2016-2022-இல் பாஜக ஆட்சியில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்குகள் 96% அதிகரித்துள்ளதாக என்சிஆர்பி தரவுகளின் அடிப்படையில் குழந்தைகள் உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான CRY (Child Rights and You) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
CRY-ஆல் நடத்தப்பட்ட பகுப்பாய்வு, 2016 முதல் இந்த கற்பழிப்பு சம்பவங்கள் ஒரு நிலையான மேல்நோக்கிய பாதையை வெளிப்படுத்தியது. அதாவது 2021 மற்றும் 2022க்கு இடையில் மட்டும், இதுபோன்ற வழக்குகள் 6.9% அதிகரித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் உட்பட அனைத்து வகையான ஊடுருவல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய விரிவான ஆய்வின் பகுப்பாய்வுகளின்படி, 2016 முதல் 2022 வரை 96.8%  உயர்ந்துள்ளது.
என்சிஆர்பி தரவுகளின்படி, 2022 இல் மட்டும், 38,911 குழந்தைகள் பலாத்கார மற்றும் வன்கொடுமை தாக்குதல்கள் பதிவாகியுள்ளன, இது 2021 இல் 36,381 வழக்குகள், 2020 ஆம் ஆண்டில் 30,705 வழக்குகள், 2019 ஆம் ஆண்டில் 31,132 வழக்குகள், 2018 ஆம் ஆண்டில், 30,917 வழக்குகள், 2017 இல் 27,616 வழக்குகள், 2016 ஆம் ஆண்டில் 19,765 வழக்குகள் பதிவாகியுள்ளன, 
ஒவ்வொரு ஆண்டும், தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) குற்றப் புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது, இது IPC மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (POCSO) சட்டம் போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படும் குற்றங்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.
2016 ஆம் ஆண்டுக்கு முன், குழந்தை பலாத்கார சம்பவங்கள் சிறப்புச் சட்டமான POCSO இன் கீழ் வகைப்படுத்தப்பட்டன (POCSO இன் பிரிவுகள் 4 மற்றும் 6 உடன் IPC இன் பிரிவு 376), மொத்தம் 19,765 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இருப்பினும், 2017 முதல், பாலியல் வன்கொடுமை வகை (IPC இன் பிரிவு 376 இன கீழ்) தனித்தனியாகப் பதிவு செய்யப்பட்டது, மேலும் POCSO சட்டத்தின் 4 மற்றும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் அனைத்தும் சிறப்புச் சட்டத்தின் கீழ் வரும்.