india

img

மோடி ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தில்லியில் தொழிலாளர்-விவசாயிகள் பேரணி

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து தில்லியில் இன்று தொழிலாளர்-விவசாயிகள் சங்கத்தினர் பேரணி சென்றனர்.

இந்தியத் தொழிற்சங்க மையம்(சிஐடியு), அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் தலைமையில் நாடு முழுவதும் அதன் கிளைகளிலிருந்தும் இதர பல்வேறு வெகுஜன அமைப்புகள் மற்றும் நடுத்தர வர்க்க ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் சார்பில் லட்சக்கணக்கானோர் இப்பேரணியில் பங்கேற்றனர்.

விலைவாசி உயர்வு, வேலையின்மை, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக உறுதிசெய்வது, தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெறுதல், கிராமப்புற வேலைஉறுதித் திட்டத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.

தில்லி ராம்லீலா மைதானத்தில் பேரணியின் நிறைவு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.