டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்)அனைத்து ரக வாகனங்களின் விலையை 2 சதவிகிதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
ஜப்பானின் டொயோட்டா மோட்டார் மற்றும் இந்தியாவின் கிர்லோஸ்கர் குழுமத்தின் கூட்டு நிறுவனமான டிகேஎம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக விலை உயர்வை வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் சிரமத்தை கருத்தில் கொண்டு செலவின் அதிகரிப்பை ஓரளவு ஈடு செய்யும் வகையில் வாகனங்களின் விலை உயர்த்தப்படவுள்ளது.
அதன்படி, வெல்பயர் தவிர்த்து, மற்ற அனைத்து மாடல்களின் விலையும் 2 சதவிகிதம் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை உயர்வு 2021 அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என டிகேம் தெரிவித்துள்ளது.