india

img

நீதிபதி சந்திரசூட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி!

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்க தடை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித் நவம்பர் 8-ஆம் தேதி ஓய்வு பெறும் நிலையில், நவம்பர் 9-ஆம் தேதி 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், சந்திரசூட் பதவியேற்க தடை கோரிய மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என கூறிய உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.