india

img

புதிய 3 குற்றவியல் சட்டங்களை ஆராய நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு


   ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள புதிய 3 குற்றவியல் சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் குழு அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு.
மோடி அரசு, தனது கடந்த ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்யா ஆகிய புதிய சட்டங்களை எதிர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்து விட்டு அவசர, அவரசமாக சட்ட அமைச்சருக்கு பதிலாக உள்துறை அமைச்சரே மசோதாவை சமர்ப்பித்து எவ்வித விவாதமின்றி ஜனநாயக விரோதமாக நிறைவேற்றிக் கொண்டது. இந்த சட்ட திருத்தங்களை உடனடியாக கைவிடக்கோரி இந்தியா முழுவதும் கண்டனங்கள் மற்றும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
 இந்நிலையில் இந்த சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் குழு அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்த 3 சட்டங்களில் மாநில அளவில் என்னென்ன திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என ஒரு மாதத்திற்குள் அறிக்கை வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.