india

img

செபி தலைவர் மாதவியை விசாரிக்க நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு திட்டம்?

மும்பைஅமெரிக்க பங்குச்சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம், தனது முதலாவது அறிக்கையில் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி பங்குச்சந்தை முறைகேடுகளில் ஈடு பட்டதாகக் குற்றச்சாட்டியது. ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டு தொடர்பாக இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஒழுங்குமுறை வாரியம் (செபி) அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு ஆதரவாகவே செயல்பட்டது. அதாவது தன் மீதான குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க அதானி, வெளிநாட்டு பங்குகளை செபியின் தலைவராக உள்ள மாதவி பூரி புச் மற்றும் அவரது கணவருக்கு தாரை வார்த்தார். வெளிநாட்டு பங்குகளை பெற்றுக் கொண்ட மாதவி அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு ஆதர வாக செயல்பட்டதாக ஹிண்டன்பர்க் நிறு வனம் தனது இரண்டாவது அறிக்கையில் போட்டுடைத்தது.

ஹிண்டன்பர்க் முன்வைத்த குற்றச்சாட்டின் பரபரப்பு அடங்குவதற்குள், மாதவி விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கி யிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி ஆதாரத்துடன் குற்றம்சாட்டி யது. அதாவது 2017ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மாதவி ரூ.16.8 கோடி ஊதியம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தனது  அறிக்கையில் கூறிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு மாதவி தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்க வில்லை. இதனால் மாதவி செபி தலைவர் பத வியை ராஜினாமா செய்யக் கோரி மும்பையி லுள்ள செபி தலைமையகம் முன்பு 200-க்கும் மேற்பட்ட செபி ஊழியர்கள் வியாழனன்று போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில், செபி தலைவர் மாதவிக்கு  சம்மன் அனுப்பி விசாரிக்க நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு திட்டம் வகுத்துள் ளது. செபி தலைவர் மாதவி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியிருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணு கோபால் தலைமையிலான நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.