india

img

பிரபல நடன இயக்குநர் ஜானி போக்சோவில் கைது

      ஆந்திர, செப்.19- பிரபல நடன இயக்குநர் ஜானி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபல நடன இயக்குநரான ஜானி கடந்த 2019ஆம் ஆண்டு 16 வயதுடைய பெண் நடனக் கலைஞரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சில நாட்களுக்கு முன்பு  ஆந்திராவிலுள்ள ராய்துர்க்கம் காவல் நிலையத்தில் புகார்  அளிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் நடன இயக்குநர் ஜானி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.