india

img

அசாமில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழப்பு!

அசாமின் கோலாகாட் மாவட்டத்தின், பலிஜான் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்து, 30 பேர் படுகாயமடைந்தனர்.

கோலாகாட் மாவட்டத்தில் உள்ள டெர்கான் அருகே உள்ள பாலிஜான் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

45 பயணிகளுடன் பேருந்து, கோலாகட் மாவட்டத்தின் கமர்பந்தா பகுதியில் இருந்து திலிங்க மந்திர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஜோர்ஹாட்டின் பக்கத்திலிருந்து லாரி எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. பலிஜான் பகுதியில் திடீரென பேருந்து லாரியின் மீது மோதியது.இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 32 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 10 உடல்கள் மீட்கப்பட்டு டெர்கான் சுகாதார மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காயமடைந்த 27 பேர் ஜோர்ஹட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்கு 2 பேர் உயிரிழந்தனர். அதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்தி, நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறினர்.