india

img

அகமதாபாத் விமான விபத்து -அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கருப்புப் பெட்டி!

அகமதாபாத்,ஜூன் 19- அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் கைப்பற்றப்பட்ட கருப்புப்பெட்டி அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், விபத்து நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கருப்புப்பெட்டியின் வெளிப்புறத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதால், டிஜிட்டல் ரெகார்டிங் தரவை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என இந்திய நிபுணர்கள் தெரிவித்ததுள்ளனர்
இதனையடுத்து அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரவுகளைப் பெற கருப்புப்பெட்டி அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.