மத்தியப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில், சிங் சண்டேல் என்பவரை போலீஸார் கைது செய்து, மற்றொருவரை தேடி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் பேருந்தில் இருந்து இறங்கும் போது கல்லூரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டார்.
இரண்டு இளைஞர்கள் பைக்கில் மாணவியை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றது பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதைக்கண்ட கடத்தப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் தேடுதல் பணியைத் தொடங்கி, விசாரணை நடத்தி வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் லஹரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றொருவரைக் கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
போலீஸார் நடவடிக்கை எடுத்து மாணவியை லாட்ஜில் இருந்து மீட்டுள்ளனர்.