india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள மாநிலத்தின் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட் டங்களில் வெள்ளியன்று அதீத அளவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மஜில் செக்டார் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக் கும், ராணுவத்தினருக்கும் வியாழனன்று அதிகாலை துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

“பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்காதது ஏன்? மேற்கு வங்கம் எரிந்தால் அசாம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, தில்லியும் எரியும்” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசி யுள்ளார். 

கொலை வழக்குத் தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ர ஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நடிகர் தர்ஷன், அங்கு சிறை விதியை மீறி வீட்டில் இருப்பது போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக ஆதாரத்து டன் தகவல் வெளியாகியது. இதனை தொடர்ந்து நடிகர் தர்ஷனை வியாழனன்று அதிகாலை 4 மணிக்கு பல்லாரி சிறைக்கு அழைத்துச் சென்றனர். 

நடிகை அளித்த பாலியல் புகாரில் சிக்கிய மலை யாள நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன் பிள்ளை ராஜூ, இடவேல பாபு உள்ளிட்டோர் மீது பாலி யல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு

“இந்தியா உருவாக்கிய மிகப்பெரிய லெஜண்ட் ஜெய் ஷா”
அமித் ஷா மகனை
 வறுத்தெடுத்த நடிகர் பிரகாஷ்ராஜ்

கிரிக்கெட் பின்புலம் எதுவும் இல்லா மல் தனது தந்தையின் (ஒன்றிய அமைச்சர் அமித் ஷா) அரசியல் ஆதரவுடன் சர்வதேச கிரிக்கெட் வாரியத் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளார். மிகக் குறைந்த வய திலேயே ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள ஜெய் ஷா வருகிற செப்டம்பர் 1 அன்று பதவி ஏற்க உள்ள  நிலையில், திரைக்கலைஞரும் அரசியல் விமர்சகருமான பிரகாஷ் ராஜ் ஐசிசி தலைவராக பொறுப்பேற்கவுள்ள அமித் ஷா மகனை நையாண்டியுடன் வறுத்தெ டுத்துள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ்  பக்கத்தில் பிரகாஷ் ராஜ் கூறுகை யில்,”பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், விக்கெட் கீப்பர், பீல்டர் மற்றும் அற்புத மான ஆல்ரவுண்ட் கிரிக்கெட் வீரராக  இந்தியா உருவாக்கிய மிகப்பெரிய லெஜெண்ட் ஜெய் ஷா, ஐசிசியின் தலைவ ராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு நாம் அனைவரும் எழுந்து  நின்று கைதட்டுவோம்” என  பதிவிட்டுள் ளார். நடிகர் பிரகாஷ் ராஜின் பதிவு சமூக வலைத்தளங்களில் டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது.

சண்டிகர்

ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி

பாஜக ஆளும் ஹரியானா மாநி லத்தில் வரும் அக்டோபர் 1 அன்று சட்டமன்ற தேர்தலுக் கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான கருத்து கணிப்பை லோக்போல் (Lok Poll) நிறு வனம் வெளியிட்டுள்ளது. அதில், “மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதி களில் பெரும்பான்மைக்கு  46 இடங்க ளில் தேவை என்ற நிலையில், எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சி 46 முதல் 48 சதவீத வாக்குகளுடன் 58 முதல் 65 தொகு திகளில் வென்று ஆட்சியை கைப்பற்றும். தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக 25 முதல் 37 சதவீத ஓட்டுகளுடன் 20 முதல் 29 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழக்கும். மற்றவர்கள் 7 முதல் 8 சதவீத ஓட்டுகள் பெற்று குறைந்த பட்சம் 3 முதல் அதிகபட்சமாக 5 இடங்க ளில் வெல்லலாம்” என லோக்போல் நிறுவனம் தனது கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது.