india

img

விமர்சனத்தை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை

புதுதில்லி பிரதமர் மோடி குஜராத் முதல்  வராக இருந்த காலகட்ட மான 2022இல் கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு வன்முறை வெடித்தது. இந்த வன்  முறையில் பில்கிஸ் பானு என்ற  21 வயதுமிக்க 5 மாத கர்ப்பிணியை  இந்துத்துவா குண்டர்கள் பலாத் காரம் செய்தது மட்டுமல்லாமல், அவரது 3 வயது குழந்தை உள்பட குடும்பத்தில் 7 பேரை படுகொலை  செய்தனர்.

இந்த வழக்கில் 11 பேர் கைது  செய்யப்பட்ட நிலையில், 11 பேருக்  கும் சிறை தண்டனை வழங்கப்பட்  டது. கடந்த 2022 ஆகஸ்ட் 15 அன்று  11 குற்றவாளிகளும் குஜராத் பாஜக அரசின் சிறப்பு உத்தரவால்  விடுதலை செய்யப்பட்டனர். இந்த  உத்தரவை எதிர்த்து பில்கிஸ் பானு  செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த  ஜனவரி மாதம் 8 அன்று குற்றவாளி கள் 11 பேரை விடுதலை செய்த  உத்தரவை ரத்து செய்து, “குற்ற வாளிகளில் ஒருவர் அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகி றார்” என குஜராத் பாஜக அரசிற்கு  எதிராக கடுமையான விமர்சனங் களை முன்வைத்தது.

இந்நிலையில், இந்த விமர் சனங்களை நீக்க கோரி குஜராத் அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான்  ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்திற்கு பின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “உச்சநீதி மன்றம் தெரிவித்த கருத்தில் எந்த  தவறும் இல்லை. எனவே கருத்  துக்களை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விற்கு எந்த தகுதியும் இல்லை என்பதில் நாங்கள் திருப்தி அடை கிறோம். குறிப்பாக விமர்சனத்தை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை. எனவே குஜராத் அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என  உத்தரவிட்டனர்.